Thursday, November 14, 2013

குழந்தைகள் தினம்




புன்னகையில் - ஆதவனின்
ஒளியைச் சுமந்து
குதூகலத்தில் - துள்ளியோடும்
மானின் துறுதுறுப்போடு
எடுத்த காரியமதை முடித்திட
ஓயாத விடாமுயற்சியோடு
எதையும்  அறிந்து  கொண்டு
விடத் துடிக்கும் ஆர்வத்தோடு
கொஞ்சிப் பேசும் மொழியெலாம்
தத்தை  பேச்சினும்  இனிமையோடு
கள்ளமென்பதை  எள்ளளவும் அறியா
கிள்ளை உள்ளங்களோடு -
நாளும்  வாழ்ந்திடுவோம் 
இளமை மாறா இதயத்துடன் !!!


 நண்பர்கள் அனைவருக்கும் இனிய      குழந்தைகள் தின நல்வாழ்த்துகள் !!!

10 comments :

  1. வணக்கம்
    புன்னகையில் - ஆதவனின்
    ஒளியைச் சுமந்து
    குதூகலத்தில் - துள்ளியோடும்...

    அழகான குழந்தை தினக்கவிதை அருமை வாழ்த்துக்கள்
    குழந்தை தின வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் அன்பானதொரு வாழ்த்துக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் நண்பரே.

      Delete
  2. சிறப்பானதொரு குழந்தைகள் தின வாழ்த்தொன்று .உங்களுடன்
    சேர்ந்து நாமும் வாழ்த்துவதில் பெருமை கொள்கின்றோம் .பகிர்வுக்கு
    மிக்க நன்றி சகோதரரே .

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் அன்பானதொரு வாழ்த்துக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் தோழி.

      Delete
  3. கள்ளமில்லா வெள்ளை உள்ளங்கொண்ட
    முல்லைப்பூச் சிரிப்பு மல்லிகைகளை நினைந்து
    வாழ்த்திய சிறப்பான கவிதை! அருமை!

    வாழ்த்துக்கள் தோழி!


    ReplyDelete
    Replies
    1. தங்களது அன்பான வாழ்த்துகட்கு என் மனமார்ந்த நன்றிகள் தோழி.

      Delete
  4. வழாக்கம் போல் அருமையான கவிதை வரிகள்.

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் உற்சாகமூட்டும் கருத்துப் பதிவிற்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் தோழி.

      Delete
  5. பார்த்தவுடன் மனதில் மலர்கிறது புன்னகை வாழ்த்துக்கள் கவிதையும் படமும் நன்று

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் அன்பான வாழ்த்துகட்கும் நன்றிகள் பல தோழி.

      Delete

Related Posts Plugin for WordPress, Blogger...