Friday, April 15, 2011

நம்பிக்கை


பரந்து விரிந்த வானம்
என்றென்றும்
திறந்து இருக்கும் என்ற
நம்பிக்கையில்
பறவைகளின் வாழ்க்கை
சிறகடித்துக் கொண்டிருக்கிறது...

தான் வேரூன்றி நிற்கும்
பூமித்தாய் தன்னை
தாங்குவாள் என்ற
நம்பிக்கையில்
தாவரங்களும் மரங்களும்
தலையசைத்து நிற்கின்றன...

சுற்றும் பூமிப்பந்து 
என்றென்றும் சுழன்று
கொண்டே இருக்கும் என்ற
நம்பிக்கையில் கலக்கமின்றி
இரவு பகலென உழலும்
இவ் வையம்....

நம்பிக்கை- அது
வாழ்வின் ஆதாரம்....
இறைவன் உலகுக்கு
அளித்த காணிக்கை....
எதிர் கொள்வோம்
வாழ்வை- புதிய
நம்பிக்கையோடு.....
http://eluthu.com/kavithai/46183.html 

No comments :

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...