Friday, April 15, 2011

மௌன மரங்கள்!!!


வெயிலுக்கு ஒதுங்க 
நிழல் தேடி....
என் மடியில் வந்து 
தஞ்சமடைகிறாய்.....
என்னிடமிருந்து நீ 
எதை எடுக்கவில்லை??
நான் தான் உனக்கு எதை 
கொடுக்க மறுத்தேன்???
அன்னமிட்ட வீட்டில் 
கன்னமிடுவது போல் 
என்னையே வெட்டுகிறாயே???
கண்ணீருடன் 
எதிர்க்க திராணி இன்றி 
ஓங்கி நிற்கும் மரங்கள்!!!
http://eluthu.com/kavithai/36945.html 

No comments :

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...