Monday, April 18, 2011

வாழ்க்கை

அன்பை கூட்டி....அகம்பாவம் கழித்து
அறிவை பெருக்கி... அறநெறி வகுத்து
ஆண்டவனிடம் ஆக்கம் கற்று
ஆனந்தம் உலகெல்லாம் பரப்பி
இன்பம் கொடுத்து
இல்லாமை நீக்கி ..... இயல்பாய் வாழ்ந்து
ஈகை கடைப்பிடித்து
உள்ளங்கள் உணர்ந்து
உலகை ஒன்றாக்கி
ஊருடன் ஒன்று கூடி
எல்லோரும் ஓரினமென
ஏற்றம் பெற்றிட
ஐயமின்றி போரிடுவோம்
ஒன்றே குலமேன்றக்கிடுவோம்
ஓராயிரம் தடையாயினும் தகர்த்திடுவோம்..
ஔவியம் பேசாது வாழ்ந்திடுவோம்
இறைவன் நமக்களித்த வாழ்க்கையினை!!!
http://www.eegarai.net/t48826-topic 

No comments :

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...