Friday, April 15, 2011

பெண்ணுக்குள் பூகம்பம்


சலனமில்லாமல்  மென்மையாய்
பொறுமையின் இருப்பிடமாய்
அமைதியாக நகரும் நதியென
வாழும் பெண் பொறுமையிழந்து
கொந்தளிக்கிறாள் ......எப்போது??
அன்பே ஆயுதமாய்
கனிவே படைகலன் என
வாழும் அவளிடம்
அநீதி எனும் விஷக் கணைகள்
தொடுக்கப்படும்போது......
வெற்றிச்சிகரத்தை எட்ட
விடா முயற்சியுடன்
தன் சுகம் மறந்து
மாடாய் உழைத்து
உருக்குலைந்து போய்
வெற்றிக்கனி  கைகளுக்கு வரும் நொடியில்
தட்டிப்பறித்து  உதாசீனப் படுத்தப்படும்போது........
பொறுமையே கைக்கொண்டு
எக்காளமிடும் ஆரவாரத்தை    
கருத்தில் கொள்ளதபோதும்
அது எல்லை மீறும்
அந்த ஒரு நொடி.....
பெண் பூகம்பமாகிறாள்......
http://eluthu.com/kavithai/46185.html 

No comments :

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...