Friday, April 13, 2012

இன்று புதிதாய் பிறந்தோம்-காதலில்!!!


வார்த்தைகளின் சம்பாஷனைகள்
அனைத்தும்  மறைந்து
பார்வைகளே  வார்த்தைகளாய்
மௌனமே மொழியாய்
புன்னகையே உரையாடல்களாய்
மாற்றிவிட்ட உணர்வு - காதல்!!!!
காலத்தை எங்ஙனம் தான்
கையகப்படுத்துகிறதோ -
இந்தக் காதல்??
அறிவதற்கில்லை..........
துணையது அருகிலிருந்தால்-
வருடங்கள் நிமிடங்கள் ஆகும்!!!
விலகிச் சென்றாலோ -
நிமிடங்கள் வருடங்களாகும்!!!
தொலைபேசியும் கைபேசியும்
காது  மடலோடு  
கதைகள் பல பேசும்!!!
தனிமையில் இருக்கும் போதோ -
எண்ணங்கள் ........வார்த்தைகள்....
உள்ளத்து உணர்வுகள்...........
அனைத்தும் - சரம் சரமாய்!!!
ஆனால்....
நேரில் முகம் பார்க்கும் நொடியில்-
வார்த்தைகள் எங்கோ ஒளிந்து
கண்ணாமூச்சி ஆட்டம் ஆட....
வெட்கமது மட்டும் வேகமாய்
கண்களதில் எட்டிப் பார்த்து சிரிக்கும்!!!
இதுவரை இரசிக்காத
வீட்டுத் தோட்டத்து மலரும்
மிக அழகாய் இருப்பதாய்
உணர்வு தோன்றும்.....
அனத்தலாய் இருந்த
பக்கத்துக்கு வீட்டுக்
குழந்தையின் பேச்சும்
இப்போது இனிமையாய் இருக்கும்...
எளிமையாய் இருக்கும்
மலரும் கூட
உலக அழகையெல்லாம்
ஒன்றாய் கொண்டது போல
தோன்றச் செய்யும்.....
உலகமே   இன்று  புதிதாய் 
பிறந்தது போன்ற
உற்சாகத்தை உருவாக்கும்
அற்புத உணர்வு - காதல்!!!
இன்று புதிதாய் பிறந்தோம்-காதலில்!!!

No comments :

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...