Friday, April 13, 2012

அன்பு


உள்ளமென்னும் கேணியில்

அள்ள அள்ளக் குறையாது

மென்மேலும் பெருகும்

அற்புத ஊற்று - அன்பு!!!!

தன்னலம் சிறிதுமின்றி

பிறர் நலம் எண்ணி

உளமாற பிரார்த்திக்கும்

உன்னத எண்ணம் - அன்பு!!!!

தன் சுகமது ஈந்து

சுற்றத்தின் நல்வாழ்வு பேணும்

தனிப் பெருமை வாய்ந்த

கருணையது - அன்பு!!!!

உறவுகளை உரிமையோடு

என்றும் மாறா

உள்ளன்போடு இணைக்கும்

பிணைப்புச் சங்கிலி - அன்பு!!!!

எதிரிகளை நண்பர்களாகவும்

ஆவேசத்தை அமைதியாகவும்

மாற்றும் அற்புதம் - அன்பு!!!!

இதயமதில் உதித்த அன்பு-

கண்களில் கருணையாய்!!

இதழோரம் இளையோடும் புன்னகை-

பரப்பிடும் உள்ளத்து அன்பினை-

உலகெலாம்!!!

No comments :

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...