Friday, April 13, 2012

ஹைக்கூ

சின்னஞ்சிறு  சிட்டுக்களின்    
உல்லாசச் சோலை -
பள்ளிக்கூடம் !!!
      
பூமி மகளுக்கு இயற்கைத்தாயின்
சீதன ஆபரணங்கள் -
மலர்கள் !!!
    
முயற்சி வித்தினின்று
ஆர்வ நீரதனால்
உயர்ந்த ஆலமரம் -
வெற்றி !!!
       
உலகத்து சுவாசக் காற்றில்
கலந்து விட்ட உன்னதம் -
காதல் !!!
   
இதயமதில் மலரலர்ந்த நொடி
தெரிவதில்லை -
காதல் !!!
   
கண்ணைக் கொள்ளை கொள்ளும்
ஒளி ஆபரணங்கள் -
மின்னல் !!!
  
  கண்ணீர் கொண்டு வனிதையவள்
 உலகிற்கு ஒளியேற்றுகிறாள் -
 மெழுகுவத்தி !!!

 வானமகள் அவிழ்த்துவிட்ட
மேகக் கூந்தல் -
நீர்வீழ்ச்சி !!!

·அன்னை தெரசா பற்றி
 பாடம் நடத்துகிறார் ஆசிரியர் -
 கண்களில் கனலுடன் !!!

விடியலுக்கு பன்னீர் தெளித்து
வரவேற்போ?? - புல்லின் நுனியில்
பனித்துளி !!!

பூமித் தாயின் மடிதனில்
கால் பரப்பி அமர்ந்திருக்கும்
கிள்ளைகள் - மரங்கள் !!!

·மேகப் போர்வை போர்த்தி
தன்மையை சுமந்து - மண்ணில்
மணம் பரப்புகிறாள் - மழை மகள் !!!

பார்வைகளில் உதித்த நட்பு
குரல்வழி தொடர்கிறது -
திசைகள் மாறியதால் !!!

 ஏனிந்த அலைபாய்வு ?
முகவரி தொலைந்து விட்டதோ-
ஓடும்  மேகங்கள் !!!

 உறவுகளின் வருகையா அல்லது
பசியின் அழைப்பா ???
வீட்டுக் கூரையில் காகம் !!!

கடல் இடையிருந்தாலும்
கடல் கடந்தும் தொடர்கிறது நட்பு -
பாலமாய் இணையம் !!!

 உலகையே கைக்கொண்ட
திருமாலின் புதிய அவதாரம் -
கணிப்பொறி !!!

மழை அன்னைக்கு
மானுடனின் கருப்புக் கொடி -
கருப்புக் குடை !!!

கள்ளமில்லா சிரிப்பால்
உள்ளம் கொள்ளையிடும் கள்வர்கள் -
குழந்தைகள் !!!

இரு கைகொண்டு
உலகையே கட்டி ஆளும்
அதிகாரம் - கடிகாரம் !!!

No comments :

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...