Friday, April 13, 2012

நிதர்சனமான உண்மை!!!!

உலகம் - இது  விசித்திரமானவர்கள்
பலர்  நிறைந்த ஓர்
சாகசக் கூடம்!!!
இங்கு வாழ்வென்பது -
கழைக் கூத்தாடியின்
நிலை போன்றதொன்றேயாகும்!!!!
இரட்டைப் பேச்சுக்கள்
இங்கே ஏராளம்........ உன்
முகத்துக்கு நேரே
உன்னை வானளாவ
உயர்த்திப் பேசும்!!!
உன் முதுகிற்குப் பின்னாலோ
உனக்கு சவக் குழியே
தோண்டிக் கொண்டிருக்கும்!!!
வாழ்ந்தால் - பணமும்
பகட்டும் கூடிவிட்டது..........
திமிரும் செறுக்கும்
ஏறிவிட்டதென்றேசும்!!!
தாழ்ந்தால் - பாவம் செய்தவன்
பரிதவிக்கிறான் ........ என்று
ஏளனப் புன்னகை
உதிர்த்துவிட்டுச் செல்லும்!!!
இதுவே - உலக வாழ்வியலின்
நிதர்சனமான உண்மை!!!
நிலையாய் நிம்மதியாய்
வாழ்ந்திட -
புறங்கூறும் வாய்ப்பேச்சிற்கு
செவிடர்களாய்........
ஏளனப் பார்வைகட்கு
குருடர்களாய்.....
வீணர்களின் குற்றப் பத்திரிக்கைகட்கு
ஊமைகளாய்.....
மாறிவிட்டால் - வாழ்ந்திடலாம்
நம் வாழ்வை - நிம்மதியாய்!!!!!!

No comments :

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...