Thursday, April 16, 2015

சக்தி வடிவம்


ஆயுதம் ஏந்தி  நிற்கின்றோம்
ஆத்திரத்திற்கே உரித்தான
சிவப்பாடை உடுத்தியுள்ளோம் !
மங்களம் நிறைந்த
மஞ்சளையும் அணிந்துள்ளோம் !
கோபத்தின் அடையாளம் எல்லாம்
எம் புறத்தில் கொண்டுள்ளோம் !
ஆனால் -  அன்பும் கருணையும்
அகத்தில் நிறையவே கொண்டுள்ளோம் !
அமைதியையும் பொறுமையையும்
 அதிகமாகவே செயலாற்றுகின்றோம் !
எங்கள் அகத்தையே முகமும்
இங்கே பறைசாற்றுகிறது !
 ஆயுதம் சுமந்து நின்றாலும்
அமைதியையே இறைவனிடம்
 இறைஞ்சி நிற்கின்றோம் !
 சக்தி வடிவம் நாங்கள்
 எந்நாளும் ஆக்க சக்தியாய்-
 ஊக்க சக்தியாய் திகழ்வோம் !
நானிலம் நலமுடன் விளங்க
 நல்லெண்ணங்களை மனங்களில்
வித்தாக்கிடுவோம் !

http://www.vallamai.com/?p=56386













4 comments :

  1. சக்திமிக்க வல்லமை வாய்ந்த கவிதை வரிகளுக்குப் பாராட்டுகள்.

    வல்லமையில் வெளியானதற்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. வல்லமையில் உங்கள் சிறப்பான கவிதை. பாராட்டுகள்.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...