Tuesday, September 15, 2015

புலரும் பொழுது



இருளாடை மெல்ல விலக்கி
ஒளிதனை சூட்டிக் கொண்டு
புது நாளொன்றும் பிறக்கிறது !
விடியலை வரவேற்க
வாசலும் இங்கே திறந்திருக்க
வரவேற்பு மிதியடியும்
அழகாய் கண்சிமிட்ட
அன்றைய முக்கிய நிகழ்வுகளை
சுமந்து காத்திருக்கும் செய்தித் தாளும்
ஆசனமும் தயாராய் தான் காத்திருக்க
மானுடரை சுமந்து செல்லும்
பாதுகைகளும் எப்போதுமே
தயாரான நிலையில் இருக்க
இனிமையும் இன்பமும் நிறைந்த
நாளொன்றின் அடையாளமாய்
புலரும் பொழுது !

நன்றி, வல்லமை மின்னிதழ்
http://www.vallamai.com/?p=61051

5 comments :

  1. பொழுது புலர்ந்தது

    ReplyDelete
  2. இனிய நாள் புலர்ந்தது உங்கள் கவிதையில், வாழ்த்துகள் தோழி

    ReplyDelete
  3. அருமையாகத்தான் தொடங்குது பொழுது,,,,,

    ReplyDelete
  4. ஆஹா இப்படிப் பொழுது புலர்ந்தால் தினமும் இனிமைதான்....அருமை..

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...