Thursday, January 14, 2016

பொங்கல் நல்வாழ்த்துகள் !



புது அரிசியோடு புதுப் பானையும்
பொங்கி வரும் பொங்கலும்
எதிர் வரும் புதிய நாட்களில் - மகிழ்ச்சி
பொங்கி வருவதைக் குறிக்க
தித்திக்கும் கரும்பும் வெல்லமும்
இனிமையான தருணங்களை
வாழ்வினில் கொண்டு வந்து சேர்க்க
கதிரோனை வேண்டி நிற்கும் தருணமிதில்
இயற்கையோடியைந்த வாழ்வுதனை
வாழ சபதமேற்போம் !
நீராதாரங்களை நம் குடியிருப்பாக்காது
உயிர் நிலங்களில் கட்டிடங்களை இறக்கி
மண்ணிற்கு மரண தண்டனை கொடுக்காது
நம்மை நேசிக்கும் இயற்கையை -
நாமும் நேசிக்கப் பழகுவோம் !
நலமாய் நாளும் வாழ்வோம் !


10 comments :

  1. 2016 தைப்பொங்கல் நாளில்
    கோடி நன்மைகள் தேடி வர
    என்றும் நல்லதையே செய்யும்
    தங்களுக்கும்
    தங்கள் குடும்பத்தினருக்கும்
    உங்கள் யாழ்பாவாணனின்
    இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. தங்களது அன்பான வாழ்த்துகட்கு மனமார்ந்த நன்றிகள் ஐயா.

      Delete
  2. இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்...

    ReplyDelete
    Replies
    1. மனமார்ந்த நன்றிகள் ஐயா. தங்களுக்கும், தங்களது குடும்பத்தார்க்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

      Delete
  3. மனம் நிறைந்த இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்/

    ReplyDelete
    Replies
    1. மனமார்ந்த நன்றிகள் ஐயா. தங்களுக்கும், தங்களது குடும்பத்தார்க்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

      Delete
  4. நல்ல கவிதை. பாராட்டுகள். படத்தேர்வு அருமை. தங்களுக்கும், தங்கள் இல்லத்தார் அனைவருக்கும் என் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. தங்களது அன்பான பாராட்டுதல்கட்கு நன்றிகள் ஐயா. தங்களது அன்பான வாழ்த்துகட்கு மனமார்ந்த நன்றிகள்.தங்களுக்கும், தங்களது குடும்பத்தார்க்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

      Delete
  5. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் தமிழர் திருநாளாம் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...