Sunday, January 15, 2012

அசையாதா அரசியல் தேர்?

கருமமே கண்ணாய்
கருணையே மொழியாய்
வார்த்தைகளே சத்திய
வாக்குகளாய் -
வருமானம் கூட
வரும் மக்களுக்காய்
என்றிருந்த காலம் மாறி
கர்மம் எனில் என்ன ?
கருணையின் விலை என்ன?
என்றாகி - கொடுத்த
வாக்குகளெல்லாம் செல்லாக்
காசுகளாகி  மூலையில் கிடக்க
எண்ணக் கூட நேரமில்லாது -
செல்வமது குவிந்து கிடக்கும்
காலமிது - அரசியல் தேரோட்டதிலே !!!!
தேருமது சிக்கிக் கொண்டு
அசைய மாட்டாது நிற்கிறது -
இலஞ்சச் சேற்றினிலும்
ஊழல் சாக்கடையிலும் .........
தோள் கொடுத்துதவ வேண்டிய
சாரதிகள் ஒதுங்கிக் கொள்ள
சில கர்ணப் பிரபுக்கள்
தோள் கொடுத்து
தூக்க முனைந்தாலும்
சாக்கடைப் புழுக்கள்
கர்ணனையே விழுங்கி
ஏப்பமிடுகின்றன.........
சாக்கடையைத் தூர்வாரி
சேற்றினைக் கழுவி
சுத்தப் படுத்தினாலே
அழிந்திடாதோ நெளியும்
புழுக்களனைத்தும்.....
உண்மையும் உறுதியும்
மனதில் கொண்டு
சேவையும் தியாகமும்
செயல் வடிவு பெற்றாலே
அசைந்திடாதோ அரசியல் தேர்???

No comments :

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...