Tuesday, May 3, 2016

வானமே எல்லை





சிறகை விரித்திடு !
தடைகளை தடங்கள் ஆக்கிடு !
மண்ணில் நம்பிக்கையுடன்
முதல் அடி எடுத்து வைக்க
விரிந்திடும் வாய்ப்புகள் -
ஏற்றமும் தாழ்வும் நாளும்
பாடங்கள் கற்றுத்தர - முன்னேற
வானமே எல்லையாகிப் போனது !
எண்ணும் எண்ணம் எல்லாம்
உயர்வாகவே இருக்கட்டும் !
செய்யும் செயல் எல்லாம்
நல்லவையாகவே இருக்கட்டும் !
நம்பிக்கை அதனை எப்போதும்
கைக்கொண்டால் - வெற்றி
மாலையாய் தோள் சேரும் !
முயற்சிக்கும் பயிற்சிக்கும்
தடையேதும் இல்லை -
வெற்றிக்கு எந்நாளும்
வானமே எல்லை !


2 comments :

  1. நல்லதோர் கவிதை. பாராட்டுகள்.

    ReplyDelete
    Replies
    1. மனமார்ந்த நன்றிகள் சகோதரரே.

      Delete

Related Posts Plugin for WordPress, Blogger...