Wednesday, November 21, 2012

துளிர்!

கையிலிருக்கும் அட்சயப்  பாத்திரத்தின்
பெருமை உணராது – அலட்சியமாய்
ஒடித்தெறிந்து விட
இன்றோ – பிச்சைப் பாத்திரம்
ஏந்தி நிற்கிறோம் !!!
மரங்களை வெட்டி
எறிந்தோம் – தூய்மையான
சுவாசக் காற்றைத் தேடி
யாசகர்களாய் அலைகிறோம் !!!
பாவிகளை இரட்சிக்கும்
தேவ தூதன் என –
நமக்காய் மீண்டும் மண்ணில்  –
புத்தம் புது துளிராய் !!!
புது நம்பிக்கையுடன் …………
புது உற்சாகத்துடன் ……..
தன்னலமில்லா மனத்துடன்
ஓர் புத்துயிரின் ஜனனம் !!!!

http://www.vallamai.com/literature/poems/28886/ 

No comments :

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...