Friday, September 28, 2012

மரணம் தின்ற நட்பு

புல்லின் நுனிதனில் அமர்ந்து -
அதனுடன் சிரித்து அளவளாவி
மகிழ்ந்திருந்த பனித்துளி...
நொடிகளில்  மரணத்தை தழுவியது....
இது என்ன?? - மரணம்
தின்று விட்ட நட்போ??
அடர்ந்த மரத்தின் கிளைதனை
நட்புடன் நாடிநின்ற இலையும்
உதிர்ந்த நொடியதில் - அங்கு
இலையும் கிளையும்
கொண்டிருந்த நட்பினை
மரணம் தின்றுவிட்டதோ???

http://www.vaarppu.com/padam_varikal.php?id=83 

No comments :

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...