Friday, December 18, 2015

சுகமாக்கும் உறவுகள் !



மகிழ்வான தருணங்களில்
தலையில்  தூக்கி வைத்து
கொண்டாடி மகிழ்ந்து
துவண்ட பொழுதுகளில்
கைகொடுத்து தூக்கியே
உற்சாகமூட்டி உறுதுணையாகி
வாழ்வின் ஒவ்வொரு தருணமதிலும்
சுமையாக ஓர்பொழுதும் எண்ணாது
சுகமாக ஏற்றுக் கொண்டு
எந்தன் வாழ்வின் பாதை தனில்
துணையாக வரும் உறவுகள்
அனைவரையும் சுமக்கிறேன்
எந்தன் நெஞ்சமதில் சுகமாக !
ஏற்றத் தாழ்வுகள் - மேடு பள்ளங்கள்
 அனைத்தையும் கடக்கின்றேன்  - அந்த
அன்பு உள்ளங்களின் துணையுடனே !

www.vallamai.com/?p=64660

4 comments :

  1. சிறந்த பாவரிகள்
    சிந்திக்கவைக்கிறது
    தொடருங்கள்

    http://www.ypvnpubs.com/

    ReplyDelete
  2. அருமை! வாழ்த்துகள்!

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...