Tuesday, September 27, 2011

ஆசை மரம்

அந்த ஆலயத்தின் 
முகப்பில்......உயர்ந்து 
முதற்கடவுளுக்கு தன 
மடிதனில் இடமளித்து- கம்பீரமாய்...
உயர்ந்து நின்றிருந்தது-
அம்மரம் !
இலை.....பூ....கிளை......
என்று எதுவுமே தெரியாமல் 
மரம் முழுதும் வியாபித்திருந்தன 
துணி முடிச்சுப் பழங்கள்!
எத்தனை எத்தனையோ 
உள்ளங்களின்-
ஆசைகள்...... கனவுகள்.....
நம்பிக்கைகள்.... கற்பனைகள் ......
திருமண வரம் வேண்டி 
கன்னியவள் கட்டி வைத்த
காதல் முடிச்சு.....
பிள்ளை வரம் வேண்டி
தன் முந்தானையில் 
தொட்டிலிட்டு உருகி நிற்பவளின் 
பாச முடிச்சு.....
வேலை வேண்டி 
இளைஞன் அவன் போட்டு வைத்தான்-
கனவு முடிச்சு!
இறைவனிடம் வரம் வேண்டி
எத்தனையோ விண்ணப்பங்கள் .........
அந்த அடர்ந்த மரத்தின் கிளைகளில்....
எத்தனையோ உள்ளங்களின்
சுகங்கள்.....சுமைகளை....
சுமந்து கொண்டு !!!
http://eluthu.com/kavithai/45063.html 

No comments :

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...