Sunday, September 18, 2011

தண்ணீர்

மேகமகள் தந்த 
மழையென பூமியை 
வந்தடைந்து -
மலைகளில் தவழ்ந்தோடி 
குன்றுகளில் குதித்தெழுந்து 
அருவியென மலையினின்று 
துள்ளி வந்து 
நிலத்தில் ஆறாக 
பெருகியோடி  - பஞ்சம் தீர்த்து 
குளம் மற்றும் அணைகளில் 
தேங்கி நின்று 
மண்ணிற்கு வளம் சேர்த்து 
பிறவிப் பயனடைந்து -
கடலைச் சேரும் 
அமிர்தம் - தண்ணீர்!!!
http://eluthu.com/kavithai/46177.html 

No comments :

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...