Saturday, January 11, 2014

தென்றல் !!!!

காதில் கிசுகிசுத்து விட்டு
சிரித்தோடி மறையும்
தென்றலிடம் கேட்கின்றேன் -

நாளும் இரகசியமாய் நீயும்
சொல்லிச் செல்லும்
சேதி என்னவோ ?

தலையசைத்தாடும்  மரத்திடம் கேள் !
பாதம் தழுவும் சருகினை கேள் ! - நான்
கலைத்து விளையாடும் உன்
கேசத்தினை கேள் !

தண்மையாய்  சொல்லி விட்டு
தழுவிச் சென்றது -
தென்றல் !!!!

4 comments :

  1. மிகவும் ரசிக்க வைத்த வரிகள் உங்களுக்கு என் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் .

    ReplyDelete
  2. வரிகள் அனைட்தும் ரசிக்க வைத்தது. தொடர வாழ்த்துகள்
    --------
    தங்களுக்கும்,இல்லத்தார் அனைவருக்கும்,நண்பர்களுக்கும் எனது அன்பான தமிழர் திருநாள் மற்றும் உழவர் திருநாள் வாழ்த்துகள்..

    ReplyDelete
    Replies
    1. தங்களது அன்பான வாழ்த்துகட்கு நெஞ்சார்ந்த நன்றிகள் நண்பரே.

      தங்களுக்கும் தங்களது குடும்பத்தார்க்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் !!!

      Delete

Related Posts Plugin for WordPress, Blogger...