Friday, July 10, 2015

வலைச்சரம் கவிதைகள்

வலைச்சர ஆசிரியராக கடந்த 2014 ஆம் ஆண்டு  மே மாதம் ஐந்தாம் தேதி முதல் பதினோறாம் தேதி வரை பொறுப்பேற்று இருந்த காலத்தில் ஒவ்வொரு பதிவிற்கும் நான் எழுதிய கவிதைகளின் தொகுப்பு.

தோட்டம் 

மண்ணை  முட்டி மோதி
தலையெடுக்கும் விதை
ஒவ்வொன்றுமே -
நம்பிக்கையின் சாட்சி !
துளிர்க்கும் ஒவ்வோர் இலையும்
மொட்டவிழ்த்து மணம் பரப்பும்
வண்ண மலர் ஒவ்வொன்றும்
கண்களுக்கு விருந்தாக்குமே 
எழில் கொஞ்சும்
இயற்கை காட்சி ! 

புதிர்

மூளை தன்னை
முடங்க  விடாதே
முயற்சித்துப் பார்ப்போம்
முனைப்பாய் புதிர்களையே !

கைவினை 

மனதிற்கு  மகிழ்வளிக்கும் 
நல்லதோர் வினை !
ஓய்வு  நேரமதில் 
செய்து பார்ப்போமே 
உற்சாகம் ஊட்டும் 
கைவினை !

கோலம் 

எழில் தனைக் கூட்டுமே
தீவினைகள் தமை விரட்டுமே
சிந்தையதை கூர் தீட்டுமே
வாசல் தனை அலங்கரிக்குமே
சிற்றுயிரின் பசியையும் தீர்க்குமே
அரிசி மாக் கோலமே !
  

குழந்தை / மழலை 

கொஞ்சும்  மழலையர் தம் 
சொல்லும் செயலுமே
கொண்டு  வருமே 
மனதிற்கு அளவிலா
உற்சாகம் தனையே !

8 comments :

  1. அருமையான தொகுப்பு... ரசித்தேன்... வாழ்த்துகள்...

    ReplyDelete
  2. நல்ல தொகுப்பு. அனைத்தையும் ரசித்தேன்.

    நன்றி.

    த.ம. 2

    ReplyDelete
    Replies
    1. தங்களது அன்பான வருகைக்கும் கருத்துரைக்கும் மனமார்ந்த நன்றிகள் சகோதரரே.

      Delete
  3. அனைத்தும் அருமை ரசித்தோம் !!!

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...