Friday, September 18, 2015

மழை !



மழை ! கேட்ட மாத்திரத்தில்
உள்ளந்தனில் குதூகலித்து
தெரித்திடும் - மகிழ்ச்சி அலை !
மழை அது - மண் சேர்ந்த மாத்திரத்தில்
பரவுமே உள்ளங்கவர் வாசம் !
வாசனையில் இலயித்து
நாசியும் உள்ளிழுக்குமே
புத்துணர்வு நிறை சுவாசம் !
உள்ளங்கைதனில் ஏந்தி மகிழ்ந்திட
உள்ளமும் புதிதாய் பிறந்து
குதூகலிக்குமே - சிறு கிள்ளையென !
 மழைதனை புறக்கணிக்காது
வரவேற்போம் மழையை
மண் நோக்கி ! மழையின் வரவில்
மகிழ்ந்து மணம் பரப்பட்டும்
அன்னை பூமி !

10 comments :

  1. மழைதனை புறக்கணிக்காது
    வரவேற்போம்...
    மிகச்சரியாகச் சொன்னீர்கள் நல்லதொரு ஆக்கம். வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. மழை என்பதே மகிழ்வான நிகழ்வன்றோ!i

    ReplyDelete
    Replies
    1. நன்றி சகோ. தங்களை எனது தளத்திற்கு வரவேற்பதில் மகிழ்கிறேன்.

      Delete
  3. //வரவேற்போம் மழையை
    மண் நோக்கி ! // அருமை தோழி

    ReplyDelete
  4. மழையே மழையே வருக என்று வரவேற்போம்...அருமையான வரிகள்!

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...