Wednesday, February 27, 2013

காதலர் தினம் - ஹைக்கூ

காலையில் காதலின் அடையாளம்
மாலையில் பலர் காலடியில் சின்னாபின்னம்
மௌனமாய் அழும் மலர்கள் !!!



பூவும் பலூனும் விற்றவருக்கு அமோக இலாபம் !
யுவன் யுவதிகட்கோ சேமிப்பெல்லாம் கரைந்தாயிற்று !
அன்று காதலர் தினம் !!!



மென்மையான மலரும் உண்டு
கூரான முள்ளும் உண்டு - ரோஜா
காதல் இரண்டிலும் தான் !!!



அகத்தில் உருவாகி
கண்களில் அரங்கேறும் -
காதல் !!!
அடக்கி ஆழ்வதல்ல
என்றும் அன்புடன்
துணை நிற்பதே -காதல் !!!

2 comments :

  1. மலர்களுக்கு மணம் மட்டும்மல்ல மனமும் உண்டு -அருமை

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சுரேஷ் மச்சான்...

      Delete

Related Posts Plugin for WordPress, Blogger...