Tuesday, June 18, 2019

கனமான கணங்கள்


பல கனமான கணங்களை
மெல்லிய புன்னகை
முலாம் பூசியே கடக்கிறேன் !
புன்னகை முலாமும் உதிர்ந்து
மெளனக் கவசம் பூட்டி
வாயடைத்து நிற்கிறேன் எனில்
வார்த்தை கீறல் உண்டாக்கிய
இரணமும் - உறைந்த
இரத்தத்தின் பின்னிருக்கும் வலியும்
சொல்லம்பு வீசிச் சென்ற
வாய்ச்சொல் வீரர்களுக்கு
புரிய வாய்ப்பொன்று
வாய்க்காதும் போய்விடுமோ ? என
உள்ளத்து எண்ணங்களோடு
சச்சரவு செய்தபடியே தானிருக்கிறேன்!

நன்றி, முத்துக்கமலம் .

2 comments :

  1. அருமையாக எழுதியிருக்கின்றீர்கள்

    துளசிதரன், கீதா

    ReplyDelete
    Replies
    1. தங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

      Delete

Related Posts Plugin for WordPress, Blogger...