Friday, April 15, 2011

வரம் தராத வசந்தங்கள்.....

அன்றொரு நாள்....
கல்லூரி மைதானத்தில்
என் சகமாணவியாய்
கைகோர்த்து நடக்கத் துவங்கினாய்....
உன் மழலை குணத்தினாலும் 
கள்ளமில்லா மனத்தினாலும்
என்னை கொள்ளையடித்தாய் ......
என் தோழியே....அன்று மலர்ந்ததடி வசந்தம்....
நாம் ஆடினோம்....பாடினோம்....
கவலையின்றி மகிழ்ந்திருந்தோம்.....
குறுகிய காலமாயினும்-என்றென்றும்
மனதில் நிழலாடும் வசந்த காலம்!!!
அந்த மரத்தடி கல்மேடையும்...
உன் கொஞ்சு மலையாள பேச்சும்
என்றும் என் மனதில் ரீங்கரிக்கும்....
ஆனால்...... நட்பு வரத்தை நாம் 
அறியாத நொடியில்   தந்த காலம்
பிரிவு வரத்தை  ஒவ்வொரு நொடியும்
நாம் அறியும் வகையில் தந்துவிட்டது....
உன் நட்பினை எனக்கு வரமென
அள்ளித்தந்த வசந்தங்கள் -இன்றோ
உன்னைப் பற்றி அறிய முடியாதபடி
வரம் தராத வசந்தங்களாய்.......
http://www.eegarai.net/t47385p45-2

2 comments :

  1. இப்பத்தான் எவ்வளவோ வசதிகள் வந்துவிட்டதே உங்கள் தோழியைத் தேடிக் கண்டுபிடிக்கலாமே....

    ReplyDelete
    Replies
    1. நானும் நாளும் தேடிக் கொண்டு தான் இருக்கிறேன் தோழி. தங்களது வருகைக்கும் அன்பான கருத்துரைக்கும் மிக்க நன்றி தோழி.

      Delete

Related Posts Plugin for WordPress, Blogger...