Wednesday, August 17, 2011

கடிதம்

உள்ளங்களின் பிரதிபலிப்பை
எழுத்துக்களின் பிம்பமாக்கும்
அதிசய கண்ணாடி....
ஆயிரம் மைல்கள் அப்பால் சென்றாலும்
உறவை அருகே கொண்டுவரும்
உன்னத கருவி...
வாய் திறந்து பேச யோசிக்கும் நொடியில்
உள்ளம் திறந்து கொட்டிவிட உதவும்
அற்புதக் கண்டுபிடிப்பு....
கணினித் திரை காட்டாத
உள்ளத்து உணர்வுகளை ......
உண்மையாய் காட்டிவிடும் -
நாம் கைப்பட எழுதிய கடிதம்!!!! 

http://eluthu.com/kavithai/35982.html 

No comments :

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...