Thursday, June 13, 2013

உங்கள் காதலன் அல்லது காதலிக்கு நீங்கள் எழுத நினைத்த காதல் கடிதம் (திடங்கொண்டு போராடு – காதல் கடிதம் பரிசுப் போட்டி)




          காதல் ! ஓர் மனிதனுள் எத்துனை மாற்றங்களைத் தான் ஏற்படுத்தி விடுகிறது.புத்தனாய் இருப்பவனையும் பித்தனாய் ஆக்கிடும் உணர்வு- காதல். என் காதலே ! உன்னைக் கண்ட போதும் என்னுள் அத்தகையதோர் உணர்வே ஏற்பட்டது.

எனக்காக நீ 
ஜனித்த நொடி - அது
நம் உறவும் 
பிறந்த நொடி !!!

      காதலை வெளிப்படுத்தலாமா ? உன்னிடம் இருந்து கிடைக்கும் பதில் எபடிப்பட்டதொன்றாய் இருக்கும் ? ஆத்திரம் கொள்வாயோ , அன்றி கண்டு கொள்ளாது உதாசீனப்படுத்தி விடுவாயோ? மறுத்து விடுவாயோ அல்லது காதலை ஏற்றுக் கொள்வாயோ, உனது முடிவு எதுவாயினும் அதை ஏற்றுக்கொள்ள சித்தமாய் இருக்கிறேன்.

இதயமெனும் அட்சயப் பாத்திரத்தில்
அன்பெனும் அமுதமாய்
நீ ஊற்றெடுக்க 
யாசகனாய் காத்திருக்கிறேன் -
உனக்காக மட்டுமே !!

           அன்பு கொடுக்கும் அரவணைப்பு, பாசத்தின் தேடல், நேசத்தின் மொழி, துணையின் பலம், உரிமையின் வெளிப்பாடு, உண்மையான நெஞ்சம்,என் உள்ளமதன் பிரதிபலிப்பு இவையனைத்தும் உன்னுள் நான் கண்டேன்.என் நெஞ்சினுள் உன்னை நிறைத்திட்டேன்.

           இதய வாசலைத் திறந்து வைத்துக் கொண்டு காத்து நின்றேன், இன்பத்  தென்றலுக்காய். அப்போது மெளனமாய் வந்து நான் அறியாத நொடியில் என்னைத் தழுவிய பூங்காற்று நீ. எப்படி வந்தாய், எப்போது வந்தாய் என்பதெல்லாம் தெரியவில்லை.ஆனால், உன் வரவு என்னுள் மிகப்பெரிய மாற்றத்தினை ஏற்படுத்தியது.

              உன் கரம் தனைப்பற்றி  உலகை வலம் வரக் காத்திருக்கிறேன்.உன் தோள்களில்  சாய்ந்து கதைகள் பல பேசிட விழைகிறேன்.உந்தன் காதுகளில் கிசுகிசுக்கும்  தென்றலாய் நானிருக்க ஆசைப்படுகிறேன்.நொடிப்பொழுதும் உனைவிட்டு  நீங்காது, என்றென்றும் உன்  இதயத்தில் நிறைந்திருக்க விரும்புகிறேன்.

                    உன்னைக்   காணும் வரை  நான் அறியவில்லை, நீ என்னுள் இத்துனை பெரிய மாற்றத்தினை ஏற்படுத்துவாய் என்று. என் உள்ளமதை கொள்ளையிட்டு, உன்  உள்ளந்தனை  என்  உறைவிடம் ஆக்கினாய். நீயும் நானுமாய்  எங்கெங்கோ  இருந்தோம். இன்று நாமாய்  காதலில் இணைந்து  நிற்கின்றோம்.

நீ   நானாகி
நான்  நீயாகி
நம்மிடையே 
மெளனம் மொழியாகி
நினைவுகள் பாலமாகி
இணைந்திருக்கிறோம் அன்பே...
நீயும் நானும் நாமாக !!!




குறிப்பு: இது  சகோதரர் சீனு அவர்கள் தனது திடங்கொண்டு போராடு (http://www.seenuguru.com) வலைப்பக்கத்தில்  நடத்தும் காதல் கடிதம் பரிசுப் போட்டிக்காக எழுதப்பட்ட பதிவு.



38 comments :

  1. /// காதுகளில் கிசுகிசுக்கும் தென்றலாய் நானிருக்க ஆசைப்படுகிறேன்... ///

    அருமை... வெற்றி பெற எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. தங்களது அன்பான வாழ்த்துகட்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் ஐயா...

      Delete
  2. அழகிய வர்ணனை வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகட்கும் என் மனமார்ந்த நன்றிகள் தோழி !!!

      Delete
  3. கவிதை கொஞ்சம் கடிதம் மிஞ்சும் அருமை வெற்றி பெற வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்களது அன்பான வாழ்த்துகட்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் தோழி !!!

      Delete
  4. அழகான காதல் கடிதம்!!
    போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் தோழி.

    ReplyDelete
    Replies
    1. தங்களது அன்பான பாராட்டுதல்கட்கும் வாழ்த்துகட்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் தோழி !!!

      Delete
  5. நன்றாகவே இருக்கிறது. அழகிய நடை. கவிதைகளும் சிறப்பு!
    போட்டியில் வெற்றிபெற என் வாழ்த்துக்கள் தோழி!

    ReplyDelete
    Replies
    1. தங்களது ஊக்குவிக்கும் கருத்துரைக்கும், வாழ்த்துதலுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் தோழி.

      Delete
  6. // இதய வாசலைத் திறந்து வைத்துக் கொண்டு காத்து நின்றேன், இன்பத் தென்றலுக்காய். அப்போது மெளனமாய் வந்து நான் அறியாத நொடியில் என்னைத் தழுவிய பூங்காற்று நீ. //

    ம்ம் நடக்கட்டும் அருமை வெற்றி பெற வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்களது அன்பான ஊக்குவிப்பிற்கும் வாழ்த்துக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் நண்பரே !!!

      Delete
  7. காதலும் இருக்கிறது; கிக்கும் இருக்கிறது.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றிகள் பல அப்பாதுரை
      அவர்களே !!!

      Delete
  8. பதிவர்களுக்கான பரிசுப்போட்டி வெற்றி பெற வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. தங்களது அன்பான வாழ்த்துகட்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் ஐயா.

      Delete
  9. காதல் கடிதம் அழகாக வந்திருக்கிறது... வெற்றிபெற வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. தங்களை என் தளத்திற்கு வரவேற்பதில் மகிழ்கிறேன்.

      தங்களது அன்பான வாழ்த்துகட்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் !!!

      Delete
  10. சுருக்கமாகவும் இருக்கிறது.நன்றாகவும் இருக்கிறது.

    'நீ நானாகி.....' அழகு!

    ReplyDelete
    Replies
    1. தங்களை என் தளத்திற்கு வரவேற்பதில் மகிழ்கிறேன்.

      தங்களது அன்பான வாழ்த்துகட்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் !!!

      Delete
  11. காதலாகி கசிந்துருகிவிட்டீங்க போங்க ...! நல்லாருக்கு பாஸ் ...!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோதரரே !! தங்களை எனது தளத்திற்கு வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன் !!!

      Delete
  12. // இதய வாசலைத் திறந்து வைத்துக் கொண்டு காத்து நின்றேன், இன்பத் தென்றலுக்காய். அப்போது மெளனமாய் வந்து நான் அறியாத நொடியில் என்னைத் தழுவிய பூங்காற்று நீ//

    இவ்வரிகளை மிகவும் ரசித்தேன்.
    வெற்றி பெற வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. தங்களது அன்பான வாழ்த்துகட்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் அம்மா... தங்களை எனது தளத்திற்கு வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

      Delete
  13. இதயவாசலைத் திறந்து வைத்துக்கொண்டு ! இந்தவரியில் நானும் விழுந்து ரசித்தேன் உங்கள் கற்பனையையும் கவிதைகளையும் பரிசு பெற வாழ்த்துக்கள் உறவே!

    ReplyDelete
    Replies
    1. தங்களை என் தளத்திற்கு வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

      தங்களது அன்பான வாழ்த்துகட்கு என் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

      Delete
  14. சூப்பர் வெற்றிபெற வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்களை என் தளத்திற்கு வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
      தங்களது அன்பான வாழ்த்துகட்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் சகோதரரே !!!

      Delete
  15. நான் அறியாத நொடியில் என்னைத் தழுவிய பூங்காற்று நீ.



    சூப்பர் ரசித்தேன்
    வெற்றி பெற வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. தங்களை என் தளத்திற்கு வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
      தங்களது அன்பான வாழ்த்துகட்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் சகோதரரே !!!

      Delete
  16. சிறுசா ...அழகா இருக்குது......

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் மிக்க நன்றி நண்பரே !!!

      Delete
  17. //யாசகனாய் காத்திருக்கிறேன் -
    உனக்காக மட்டுமே !!// - கலக்கல்
    // நீயும் நானுமாய் எங்கெங்கோ இருந்தோம். இன்று நாமாய் காதலில் இணைந்து நிற்கின்றோம்.//
    அருமை தோழி!
    உங்கள் கடிதம் படித்துவிட்டேன் என்றே நினைத்தேன்..இன்றுதான் தெரிந்தது தவற விட்டது...
    அருமையான கடிதம்..வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் அன்பான வாழ்த்துகட்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் தோழி !!!

      Delete
  18. கடிதம் சிறியதாகினும் இனிக்கும் காதலாய் கவிதைகள் கலந்து கட்டி அசத்தியிருக்கீங்க...

    வெற்றி பெற வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. தங்களை என் தளத்திற்கு வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன் நண்பரே.

      தங்களது கருத்துரைக்கும், அன்பான வாழ்த்துகட்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் நண்பரே !!

      Delete
  19. இதயமெனும் அட்சயப் பாத்திரத்தில்
    அன்பெனும் அமுதமாய்
    நீ ஊற்றெடுக்க

    பரிசு பெற வாழ்த்துகள்..!

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் அன்பானதொரு வாழ்த்துக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் தோழி...

      Delete

Related Posts Plugin for WordPress, Blogger...