Monday, June 22, 2015

இணையத் தமிழே இனி .....

இணையத் தமிழ் ! - அது 
தமிழரின் எண்ணங்களை 
இணைக்கும் தமிழ் !
அழகுத் தமிழ் இருக்கையிலே 
பிறமொழிக் கலப்பும் இங்கெதற்கு ?
தமிழை தமிழாக எழுதாது -
தமிழை பிறமொழியில் எழுதி 
மொழிப் படுகொலையும்  செய்வதேனோ ?

மொழியின்  அடையாளம் உருக்குலைந்தால் 
இனமும் சுவடிலாது  மறைந்திடாதோ ?
தமிழ் மொழியும் இனமும்  அடுத்த  சந்ததியில் 
அருங்காட்சியகப் பொருளாக  போக வேண்டுமா  ?
செந்தமிழும் நாப்பழக்கம் - இங்கே 
கணினித் தமிழும் விரல் பழக்கம் !
கற்க முயற்சித்தல்   பிழையில்லையே ?
உள்ளக் கருத்தை விளக்குதல்  எளிதாகுமே !

 கடல் கடந்து வாழும் தமிழர்தம்
கண்ணின் மணியான  கிள்ளைகட்கு
தித்திக்கும் தமிழமுதை  இணையமதன்
துணைகொண்டு   ஊட்டிடுவோம் !
எளிமையும்  தெளிவுமான
கண்கவர் அழகுநிறை  காணொளியில்
பிழையிலா உச்சரிப்பிலும் கவனம் கொள்வோம் !
இனிமைத் தமிழாலே இணையத்திலே இணைந்திடுவோம் !



8 comments :

  1. அருமை... இணையம் மூலம் இதயத்தில் இணைந்தே இருப்போம்...

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் அன்பான கருத்துரைக்கும் நன்றிகள் ஐயா.

      Delete
  2. அருமையான பா வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. //செந்தமிழும் நாப்பழக்கம் - இங்கே
    கணினித் தமிழும் விரல் பழக்கம் !//
    அருமையான கவிதை தோழி, வாழ்த்துகள்

    ReplyDelete
  4. சிறப்பான பா வரிகள்..... பாராட்டுகள்.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...