Saturday, July 18, 2015

வசந்த காலங்கள்




கடலும் கரையும்
கைகோர்த்து மகிழ்ந்தாட
அலையும் நளினமாய்
இங்கே நடமாட
அலை ஓசைக்கு நடுவே
காலங்காலமாய் தொடர்ந்திடும்
தன்னலமிலா நட்புகளின்
மகிழ்ச்சி பொங்கும்
சிரிப்பலையும் - தோழிகளின்
மனமதன் நினைவுகளில்  நீங்கா
ரீங்காரமாய் ஒலித்துக்
கொண்டே இருக்க
கொஞ்சும் புறாக்களாய்
சுதந்திரமாய் சிறகை விரித்து
பறந்த நாட்களெலாம்
கண்முன் விரிந்து
களிப்பூட்ட - மீண்டும்
இங்கோர் வசந்தத்தின்
அரங்கேற்றம் !


நன்றி, வல்லமை மின்னிதழ்
http://www.vallamai.com/?p=59490



9 comments :

  1. வசந்தத்தின் அரங்கேற்றம்....
    மிகவும் அருமை...
    வல்லினத்தில் வெளியானதற்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி சகோதரரே. ஒரு சிறு திருத்தம். இக்கவிதை வல்லமை மின்னிதழில் வெளியானது. வல்லினத்தில் அல்ல.

      தங்களது வருகைக்கும் அன்பான கருத்துரைக்கும் நன்றிகள்.

      Delete
  2. வல்லினத்தில் வெளியானதற்கு வாழ்த்துகள்!
    மிக் அமிக அனுபவித்து எழுதப்பட்ட வரிகள்! வாழ்த்துகள் சகோதரி!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிகள் சகோ. இக்கவிதை வல்லமை மின்னிதழில் வெளியானது. வல்லினத்தில் அல்ல.

      Delete
  3. ரசனை. இந்தப் படத்துக்கான கவிதை ஒன்றை நானும் எழுதி இருந்தேன். பேஸ்புக்கில் மட்டும்!!

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் அன்பான கருத்துரைக்கும் நன்றிகள் சகோ.
      தங்களுடைய கவிதையையும் வல்லமையில் பதிவேற்றி இருக்கலாமே.

      Delete
  4. நன்று.....

    பாராட்டுகள்.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...