Sunday, September 6, 2015

புன்னகை






நங்கையே !
உந்தன் இதழ் உதிர்க்கும்
கீற்றுப் புன்னகை மட்டும்
உந்தன் அழகிற்கு
மெருகூட்டவில்லை !
உந்தன் இதழுடன்
உன்னிரு -
கருவண்டு விழிகளும்
ஏன் - உன் மூக்கு கூட
புன்னகைக்கிறதே !
பொன்னகைக்கு அவசியமிலாது
புன்னகையே உன்
முகத்திற்கு பொலிவூட்ட
ஆயிரம் மின்னலின் ஒளியும்
உந்தன் முகத்தில் பிரகாசிக்கிறதே !

6 comments :

Related Posts Plugin for WordPress, Blogger...