Friday, March 1, 2019

தாமரை




தாமரை இலைமேல்
தெறித்த நீர்த்துளியென
உள்ளக் கமலத்தில் 
மெல்லச் சேர்ந்தழுந்தும்
துன்பச் சுமைகளையும்
ஆத்திர சிலுவைகளையும்
வெறுப்பு மூட்டைகளையும்
வீம்பான பிடிவாதங்களையும்
புறந்தள்ளி - வாழ்வைக் கடக்க
கற்றுத் தேர்ந்தால்
மகிழ்ச்சி எனும் தங்கத் தாமரை
என்றும் நம் வசமே !



இவ்வார தினமணி கவிதைமணி பகுதியில் வெளியான கவிதை.

4 comments :

  1. சூப்பர் வரிகள்!!

    ரசித்தோம்

    துளசிதரன், கீதா

    ReplyDelete
    Replies
    1. மனமார்ந்த நன்றிகள் சகோ.

      Delete

Related Posts Plugin for WordPress, Blogger...