Wednesday, March 20, 2019

நிலாக்கால நினைவுகள் !






செல்லும் இடமெல்லாம்
துணையாய் ! - எந்தன்
தனிமை வெறுமை போக்கினாய் !
சற்றே அயர்கையில்
மேகத்தினூடே ஓடியே
கண்ணாமூச்சி காட்டினாய் !
உன் முகம் பார்த்து
கட்டாந்தரையில் தலைசாயக்க
கதை பல பேசியே
கண்ணுறக்கம் ஊட்டினாய் !
இன்பக் கனவுகள் பல தந்து
இன்முகம் மனம் பதிந்து சென்றாயே !
அழகிய வண்ண நிலவே !

இவ்வார தினமணி கவிதை மணி பகுதியில் வெளியானது.

4 comments :

  1. அருமையான பதிவு

    ReplyDelete
    Replies
    1. மனமார்ந்த நன்றிகள் ஐயா.

      Delete
  2. சிறப்பான கவிதை.

    வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோதரரே.

      Delete

Related Posts Plugin for WordPress, Blogger...