Sunday, February 19, 2012

உறங்காத உண்மைகள்

உள்ளக் கரைதனில் அலைமோதும்
நினைவு அலைகள் - மாற்றுமே
மனதினை ஆர்ப்பரிக்கும்
பொங்கு கடலாய் !!!
அவற்றுள் சில
கொண்டு செல்லுமே உள்ளமதை
ஆனந்தத்தின் எல்லைக்கு!!!
சில எண்ணங்கள் நினைவுகள் - நம்மை
விட்டுச் செல்லுமே - இனம் புரியா
துன்பச் சுமைகளோடு !!!
இன்பமும் துன்பமும்
நம்மை வழிநடத்திச் செல்லும்
அனுபவ வழிகாட்டிகளின்
துணைக் கொண்டு !!!
அனுபவங்கள் பசுமையாய்
விரிந்திருக்கும் உள்ளமதில்
என்றென்றும் -
உறங்காத உண்மைகளாய்!!!

http://www.vaarppu.com/padam_varikal.php?id=79 

No comments :

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...