Tuesday, March 10, 2015

பிஞ்சு நெஞ்சின் வேண்டுதல்கள்...



ஓட்டின் இடுக்கில் சின்னஞ்சிறு கூட்டில்
சிட்டுக்குருவியும் குஞ்சுகளும்
சுகமாய் தான் வாழனும்
பூனையிடமிருந்து காத்திடனும் சாமியே !


கோழிக் குஞ்சையும் வாத்து குஞ்சையும்
பருந்து காக்கையிடம் இருந்து
பத்திரமா காக்க வேணும் - அவையும்
என் கண் முன்னே சிறகடிச்சு பறக்கனும் !


கன்றுக் குட்டியும் ஆட்டுக் குட்டியும்
என்னைக் கண்ட மறு நொடியே
துள்ளி ஓடி வந்திடனும்
அன்புடன் நானும் அணைத்திடனும் !


சின்னச் சின்ன ஆசைகளின்
சின்னஞ்சிறு பட்டியலிது
பட்டியல் வளரும் வேளைதனில்
பட்டென்று சொல்லிடுவேன் உன்னிடமே !


பொய் பொறாமை புரட்டும் தான்
என் மனதை அண்டாது காத்திடனும்
அன்பும் பண்பும்   எந்நாளும்
குறையாது நானும் வாழ்ந்திடனும் !


நாளும் உன்னைச் சந்தித்தே
நலமும் கேட்டு மகிழ்ந்திடுவேன்
நலமும் வளமும் உலகமெலாம்
நிலைத்திடவே வேண்டிடுவேன் !

http://www.vallamai.com/?p=55193

2 comments :

  1. மிகவும் அழகான நியாயமான வேண்டுதல்கள். சின்னச்சின்ன ஆசைகள். பாராட்டுக்கள்.

    ReplyDelete
    Replies
    1. தங்களது அன்பான பாராட்டுதல்கட்கு என் மனமார்ந்த நன்றிகள் ஐயா.

      Delete

Related Posts Plugin for WordPress, Blogger...