Tuesday, March 3, 2015

காணி நிலம்

 

வானுயந்து நிக்குற கட்டடம்
வயலை தான் சூழ்ந்து நிக்குதே !
காணி நிலம் தான் - இதையும்
கட்டடத்துக்கு காவு குடுத்துட்டா
சாப்பாடு போட நாளைக்கு
சாஃப்ட்வேர் வந்திடுமா ?

************


சேற்றில் நாளும் நாங்கள்
கால் வைக்கிறோம்
அன்றாடம் சோற்றில் நீங்கள்
கை வைக்கவே !

எத்துனை எத்துனை
வியர்வைத் துளிகளின்
கூட்டுப் பலன் ஓர் நெல்மணி
இது அறிவீரா மக்களே ?
இரத்தத்தை வியர்வையாக்கி
நாளும் உணவளிக்கிறோம்
பட்டினி கிடந்தாயினும்
உலகுக்கு படியளக்கிறோம் !
மண்ணையும் பொன்னாக்கும்
எம் வாழ்வில் - வறுமை
புண்ணாகி புரையோடியதை
அறிவீரோ நீங்கள் ?
நல்ல காலம் வருமென்று
நாளும் தான் காத்திருக்கிறோம்
வந்து சேரும் நன்னாளும் எந்நாளோ ?
அது எம் வாழ்வில் பொன்னாள் ஆகிடாதோ ?

************

No comments :

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...