Wednesday, April 1, 2015

துணையாக வருகிறேன் நானுமே !



கருவேல முள்ளுந்தான்
காடெல்லாம் மண்டிக் கிடக்கு
காத்தும் கூட இதனால
கடும் விஷமாத்தான் ஆகிப் போச்சு !


பொன்னா விளையுற மண்ணும்
புண்ணாகித் தான் போச்சு !
நிலத்தடி நீரும் மாயமாக
நிலமும் பாளமா வெடிச்சு போச்சு !


வஞ்சமிலாம  குடுத்த  பூமியும்
நஞ்சுபோய் தான் கிடக்குது
நஞ்சை  புஞ்சையாய் விளைஞ்ச பூமி
பஞ்சத்துக்கு தான் பலியா போச்சு !


மாடு கண்ணு காடு கழனியில
புல்லு தின்ன காலம் மாறி
நெகிழி பையை தின்னுற
நிலைமை தான் ஆச்சுது !


கட்டவுத்து விட்டுட்டு

காடெல்லாம் மேஞ்சிட்டு
கருத்தா வீடு வந்துடுன்னு
தட்டிக் குடுத்தனுப்ப ஆசைதான் !


தனியாவே நீயும் போய்
தின்னக் கூடாததை எல்லாம்
தீனியாகக் கொள்ளாமல் காக்க
தடியெடுத்து துணையாக வருகிறேன் நானுமே !


http://www.vallamai.com/?p=55908#comment-12367

4 comments :

  1. படத்தேர்வும், வேதனையூட்டும் இன்றைய நிகழ்வினை எடுத்துச்சொல்லும் பாடல் வரிகளும் அருமையோ அருமை.

    வல்லமையில் வெளியானதற்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. சிறந்த பாவரிகள்
    சிந்திக்கவைக்கிறது
    தொடருங்கள்

    ReplyDelete
  3. படமும் படத்திற்கான கவிதையும் நன்று.

    வேதனையான விஷயம்....... என்று மாறுவோம்...

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...