Saturday, July 4, 2015

முகமூடிகள்


பூனை புலி
நாய் நரி
பாம்பு பட்டுபூச்சி
உருவங்கள் பல
அறிவென்னவோ ஐந்து
இவைதம்
உள்ளந்தனில் துவேஷமில்லை !
தம்மினத்தை தாமே அழிப்பதில்லை !
பகுத்தறிவு உள்ள மானுடனோ
துவேஷம் சுமந்து
தம்மினம் தனையே கொன்று குவிக்கிறான் !
ஒரே முகம் - ஆனால்
முகமூடிகள் பல !
உள்ளந்தனில் மண்டிக் கிடக்கும்
அழுக்குகள் பல !
யாரை நம்ப யாரை நம்பாது போக
உலகமே தன் உண்மை முகம் மறைக்கிறதோ ?


7 comments :

  1. படத்துக்கு ஏற்ற மிக அருமையான ஆக்கம். ரசித்தேன். மிக்க மகிழ்ச்சி. போட்டியில் தங்களின் படைப்பு வெற்றிபெற என் நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. அருமை... வெற்றி பெற வாழ்த்துகள்...

    ReplyDelete
  3. கவிதை அருமை...
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. படத்திற்கேற்ற அருமையான கவிதை.

    மனிதனை மனிதனே கொல்லும் அவலம்.... என்று முடியும்?

    த.ம. 2

    ReplyDelete
    Replies
    1. தங்களது அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனமார்ந்த நன்றிகள் சகோதரரே.

      Delete

Related Posts Plugin for WordPress, Blogger...