Saturday, August 15, 2015

கூட்டு வாழ்வு

கூடி உணவுண்ண 
கூட்டம் தனையே
கூட்டி வந்த
புள்ளினமே !
சிதறிக் கிடக்கும்
தானியம் தனை
சிந்தை சிதறாது
அலகு தனில்
அள்ளி எடுக்கிறீரோ ?
சூரியனும் மெல்ல
கடலுள் தஞ்சமடைய
தன் மஞ்சள் பட்டாடை
திரை மூடுகிறதே !
கடலும் வானும்
நீலப் பட்டு கொண்டு
புது அரங்கம் 
அமைக்கின்றனவே !
கூடு திரும்பும் 
நேரமதில் பிள்ளைகட்கு
உணவெடுத்துச் செல்ல
கருமமே கண்ணாய்
செயலாற்றுகிறீரோ
பறவைகளே ?

4 comments :

  1. அருமை ...

    புதுக்கோட்டையில் நடக்கவிருக்கும் மாபெரும் வலைப்பதிவர்கள் சந்திப்பு விழாவின் வருகையை பதிவு செய்ய :

    http://dindiguldhanabalan.blogspot.com/2015/08/Tamil-Writers-Festival-2015-1.html

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஐயா.

      வலைப்பதிவர்கள் சந்திப்பு விழா குறித்து அறியத் தந்தமைக்கு நன்றிகள் ஐயா.

      Delete

Related Posts Plugin for WordPress, Blogger...