Monday, October 31, 2011

வானவில்

வான வீதியில்
வண்ணத் தேரென 
கம்பீரமாய் 
வளைந்தோடும் வானவில்!
தேரை ஓட்டிச் செல்ல 
தேரோட்டியும் இல்லை-
இட்டுச் செல்ல 
ஏழ்குதிரைகளும் இல்லை-
சூரியனின் வரவை ஒட்டி 
வான வீதிகளில்
அமோக வரவேற்பு!!
மழை மேகங்கள்
பன்னீர் தெளிக்க 
வானவில்லின் 
வண்ணக் கோலங்கள்!!!  
http://eluthu.com/kavithai/45062.html 

No comments :

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...