Saturday, October 8, 2011

பிரிவு

அருகாமையும் நெருக்கமும் 
சொல்லாத நட்பினையும் 
வார்த்தைகளும் ஸ்பரிசங்களும்
சொல்லாத காதலையும் 
பிரிவு அழகாய் -
அப்பட்டமாய் வெளிச்சத்திற்கு 
கொண்டுவந்து விடுகிறது!
உடனிருந்த போது 
வெறுப்பு எனும் நெருப்பு 
உள்ளத்தைச் சுட்ட போதும் 
அந்த வெறுப்பின் ஆழத்தில் 
அன்பும் காதலும் மறைந்திருப்பது -
பிரிவின் நொடியில் 
வெளிப்பட்டு விடும்....

No comments :

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...