Monday, October 3, 2011

ஒரு வழிப் பாதை.....

நடந்து வந்த சாலைப் பாதையும் 
கடந்து வந்த வாழ்க்கைப் பாதையும் 
நினைவிலிருத்தல் என்றும் நலம்.....
முன்னது நமக்கு 
பலரை அறிமுகம் செய்யும்.....
பின்னது நம்மையே 
நமக்கு அறிமுகம் செய்யும்.....
சாலை- அது என்றும் 
இருவழிப்  பாதை......
முன்னும் பின்னுமாய் 
எத்தனை முறையாயினும் 
சென்று வரலாம்......
ஆனால்.......வாழ்க்கைப் பாதையோ...
என்றென்றும் ஒருவழிப் பாதை.....
முன்னோக்கிச் செல்ல மட்டுமே முடியும்....
புதிய முன்னேற்றங்கள் கண்டு
வாழ்க்கைப் பாதையில் பயணித்திட 
முயற்சி எனும் தேரேறி 
அனுபவத்தை சாரதி ஆக்கி
வாழ்க்கைப் பாதையில் வீறுநடை போட்டு
அடைந்திடுவோம் வெற்றி இலக்கினை!

No comments :

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...