Friday, November 11, 2011

மறப்போம்.... மன்னிப்போம்!!!



உமக்கு மூச்சுக் காற்றை யாம் தந்தோம்
எம்மை மரிக்கச் செய்து அடுப்பெரித்தீர்!!
மழை வர யாகம் என்று
எம்மையே நெருப்பிலிட்டீர்!!!
உமக்கு நிழல் தந்து நாங்கள் காய
எமக்குப் பரிசாய் எங்கள் உடலில் -
உமது பெயர்க் காயங்களை விட்டுச் சென்றீர்!
வாழும் போதும் உங்களை வாழ வைத்தோம்
வீழ்ந்த பின்னும் உமக்கு செல்வமளித்தோம்!
ஆயிரம் அநீதி எமக்கு நீரிழைத்த போதிலும்
எமது கொள்கை  என்னவோ -
"மறப்போம் மன்னிப்போம்".....
தொடர்கிறது எமது சேவைப் பணி!!!
இனியேனும் உணர்ந்து செயல் படுவீர்..
உள்ளத்து உறுதி கொள்வீர் -
உலக வெப்ப மயமாதலை தடுத்திட
என்றும் எம்மைக் காத்து
உலக நலம் பேணி
நலமாக வளமாக வாழ்ந்திட !!!
http://www.vaarppu.com/padam_varikal.php?id=77

No comments :

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...