Thursday, November 10, 2011

காலடிச் சுவடு


 கடற்கரை மணலில்
பதியும் காலடிச் சுவடு போன்றது-
மனித வாழ்வு.
அடுத்தடுத்து  வரும் அலைகள்
கரையை தழுவிச் செல்லும் போது
நிலை மாறுவது போல்
மனித வாழ்வும் நிலையற்றது......
வாழும் நாளில்
தன்னலம் பேணாது
பொதுநலம் மனதில் கொண்டு
பதித்திடுவோம் நமது சுவடை
உலக ஏட்டினிலே!!!


குழலோசை-2

No comments :

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...