Wednesday, November 30, 2011

தண்ணீர்.


காற்றது இட்டுச் செல்ல
மேகப் பெண்ணவள்
காற்றின் இசைக்கேற்ப
நடனமாடுகிறாளோ???
அந்த நாட்டிய அரங்கத்தில்
நீர்த் தோழியும்
மேக மங்கைக்கு துணையாய்
கைகோர்க்கிறாள்!!!
அற்புத நாட்டியத்தைக்
கண்டு கழிக்க அங்கே
வந்து விட்டான்-
வருண தேவனும்!!!
அண்ணலது வரவால்
குளிர்ந்தது - நானிலமெங்கும்!!!
நிறைந்தது - வாழ்வும் வளமும்!!!

No comments :

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...