Wednesday, November 16, 2011

உறுதியாய் இரு...


உலகம் - இது ஓர்
சதுரங்கக் கட்டம்!!!
நம்மைச் சுற்றி
எத்தனை எத்தனையோ
இராஜாக்கள்....இராணிகள்....
மந்திரிகள்....யானைகள்......
குதிரைகள்.....சிப்பாய்கள்....
பல்வேறு வடிவங்களில்....
பல்வேறு நிறங்களில் ...
ஓர் பெரும் இராஜாங்கமே நடக்கிறது....

சதுரங்கக் கட்டத்திலோ 
இரு வேறு நிறங்கள் மட்டுமே!!!
ஆனால் உலகச் சதுரங்கதிலோ....
எத்தனை எத்தனையோ நிறங்கள்....
இராஜாங்கத்தில் -

எண்ணங்களால் உயர்ந்தோரும் உண்டு....
தம் செயல்களால் தம்மை
தாழ்த்திக் கொண்டோரும் உண்டு.....
பார்த்து பொறுமையாய் -
நிதானமாய் அடியெடுத்து வைப்போம்......
எண்ணத்தில் மேன்மை கொண்டு -
உள்ளத்தில் உண்மை கொண்டு
பெருமையாய் நிமிர்ந்து நிற்போம்.....
நம் கண்ணியமான உழைப்பின் துணை கொண்டு!!!


http://www.vaarppu.com/padam_varikal.php?id=68 

5 comments :

  1. Nice ka, netla irunthu edhutingala. illa own kavithaiya?

    ReplyDelete
  2. Thanks Balaji....நான் எழுதினது தான்.....இந்த blog ல என்னோட கவிதைகள் மட்டும் தான் publish பண்ணுகிறேன்.

    ReplyDelete
  3. This poem is published in vaarppu.com.The above given URL is the page where the poem is published.

    ReplyDelete
  4. உலகின் உண்மை இதுதான்...அருமை!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோதரி !!!

      Delete

Related Posts Plugin for WordPress, Blogger...