Monday, September 10, 2012

உன் அழகில் தொலையும் நான்

அலையின் அலைக்களிப்பிற்கேற்ப
அசைந்தாடும் ஓடம் -
சென்றிடுமே நீர் செல்லும் வழி எல்லாம் !!!
காற்றின் இசைக்கேற்ப
நீரின் மேல் நடனமாடும் !!!
இயற்கையின் அழகதனை
இன்பமாய் ரசித்திட
நமக்கு வழிகாட்டியாய்.....
நம்முடன் துணைவனாய் !!!
ஓடமே.... உன்
அழகில் தொலைகிறேன் நான் !!!
ஆம் - பிறர் மனம் மகிழ்ந்திட
நீயே ஆகிறாய் -
ஓர் கருவியாய் !!!
உன் தன்னலமில்லா
உள்ளத்தின் - கள்ளமில்லா
அழகில் தொலைகிறேன் நான் !!!

http://www.vaarppu.com/padam_varikal.php?id=82 

No comments :

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...