Saturday, June 6, 2015


இறகை மெல்ல அசைத்து
காற்றில் மிதந்தபடி
நீரில் பிம்பம் கண்டு
மெல்ல பறக்கையில்
கவனம் கவர்ந்த
துள்ளிக் குதிக்கும் மீனையுமே
அலகால் விருட்டென
பற்றிக் கொண்டு
மேலெழும்பி - காற்றைக்
கிழித்தபடி பறந்து
பாறையின் மீதே
சேகரித்திருக்கும்
மீன் குவியலுடன்
சேர்த்திட்டால் - கவலையின்றி
பசியாறி களிக்கலாம் !
மகிழ்வோடு சிறகை விரித்து
வானையும் அளந்து
சிறகடிக்கலாம் !



6 comments :

  1. தங்களது வருகைக்கும் அன்பான கருத்துரைக்கும் மனமார்ந்த நன்றிகள் ஐயா.

    ReplyDelete
  2. படமும் அதற்கேற்ற பாடலும் ரசிக்க வைத்தன. பாராட்டுகள்.

    ReplyDelete
  3. அருமை
    ரசித்தேன் நண்பரே

    ReplyDelete
  4. அருமை தோழி..பசியாறி பின் வானையும் அளக்கலாம்.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...