Wednesday, October 5, 2016

நினைவுகள்



மூடிய வாசற் கதவுகளை
நனைத்துப் போகும் 
மழைச் சாரலைப் போல
சில நினைவுகள் -
மனதின் அடியாழத்துள்
ஒளிந்து கொண்டிருக்கும்
உணர்வுகளுக்கு கண்களை
வடிகாலாக்குகின்றன - கண்ணீராய் !
நினைவுகள் ! - நிமிடங்களை  நகர்த்துகின்றன !
நல்லன ... அல்லன .... எதுவாயினும்
வாழ்வின் பொழுதெலாம்
நினைவுகளாலேயே நிரப்பப்படுகின்றன !
மறத்தல் எனும் யுக்தி -இயற்கை
அளித்த ஆதாயமாய் நம்முள் இருப்பினும்
ஏனோ மனம் - மறத்தலை விடவும்
நினைப்பதிலேயே மூழ்கி விடுகிறது !
நாளும் இயந்திரமாய் நகரும் வாழ்வுதனில் 
மனித மனங்களை நாளும் ஆக்கிரமிப்பவை 
நினைவுகளே ! நினைவுகளன்றி வேறொன்றுமிலையே !
நினைக்கும் நினைப்பெல்லாம் நல்லனவாய் இருக்கட்டும் -
நல்லன எண்ணும் மனங்களில்
மகிழ்வும் பொங்கிப் பிரவாகமெடுக்குமே !
நட்பு  சுற்றமனைத்தையும் 
மகிழச் செய்து மகிழ்ந்திடுமே !

6 comments :

  1. கவிதை அருமை...
    வாழ்த்துக்கள் சகோதரி...

    ReplyDelete
    Replies
    1. மனமார்ந்த நன்றிகள் சகோதரரே !

      Delete
  2. அருமை. பாராட்டுகள்...

    //அடியாளத்துள்// ? அடியாழத்துள்....

    ReplyDelete
    Replies
    1. தங்களது அன்பான பாராட்டுதல்கட்கும், பிழையினை சுட்டிக்
      காட்டியமைக்கும் நன்றிகள். பிழையினை திருத்தி விட்டேன்.

      Delete
  3. அருமையான கவிதை ..என் நினைவுகளையும் மீட்டு எடுத்தது... பகிர்வுக்கு மிக்க நன்றி
    http://snowwhitesona.blogspot.in/

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் அன்பான கருத்துரைக்கும் மனமார்ந்த நன்றிகள் தோழி.

      Delete

Related Posts Plugin for WordPress, Blogger...