Tuesday, September 3, 2019

சிரிப்பு !



பிறரை மகிழ்விக்க
கண்களில் அரும்பி
உதடுகளில் மலரும்
எழில் நிறை பூ - சிரிப்பூ !

அணி ஆபரணம் தராத
எழில் தனை - கள்ளமிலா
சிரிப்பு அனாயசமாக
வாரித் தந்துவிடும்!

பிறர் உள்ளக் குடம் உடைத்து
அவர்தம் கண்ணீரை தண்ணீராய்
நம் எண்ணச் செடிகளுக்கு
பாய்ச்சாதவரை அழகு - இந்த சிரிப்பு !

கொள்ளையிட்டு கொண்டுவிட
வாய்ப்பே இல்லாதது !
கொடுத்தால் - தானே தேடி வந்து
நம்மை தஞ்சமடையும் சிரிப்பு !
 
 
இவ்வார தினமணி கவிதைமணி பகுதியில் வெளியான கவிதை.

3 comments :

  1. சிறப்பான கவிதை... தினமணியில் வெளியீடு.... பாராட்டுகள்.

    ReplyDelete
  2. தினமணியில் இடம்பெற்றமைக்கு வாழ்த்துக்கள்.
    அருமையான கவிதை.

    ReplyDelete
    Replies
    1. மனமார்ந்த நன்றிகள் சகோதரரே.

      Delete

Related Posts Plugin for WordPress, Blogger...