Monday, March 28, 2011

பனி

வெள்ளைக் கம்பளம் ஒன்று
பூமித் தாயின் மடிதனில்
விரிந்து கிடக்கிறது.....
ஓங்கி உயர்ந்து நிற்கும்
மரங்களும் - தேவதைகள் போல்
வெள்ளை அங்கி அணிந்து நிற்கின்றன.....
சூரியனின் ஒளிப் பிம்பங்கள்
பட்டது தான் தாமதம்
புன்னகை கீற்று போல
மெல்லென மின்னி
உருகி மௌனமாய்
கரைந்தோடின -
பனித் துகள்கள்.....
http://eluthu.com/kavithai/36950.html 

2 comments :

Related Posts Plugin for WordPress, Blogger...